tamilnadu

img

பாகிஸ்தான் கராச்சியில் வெடிவிபத்து - 5 பேர் உயிரிழப்பு 

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள மாஸ்கான் சௌராங்கி பகுதியில் அடுக்குமாடு குடியிருப்பில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கராச்சி பல்கலைக்கழகம்  முன்பாக அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கி, பல்பொருள் அங்காடி, மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு செல்ல வழிகள் உள்ளன. அங்கு திடீரென மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்றுள்ளார். விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது. 3 பேரின் சடலங்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. காவல்துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விபத்து 20 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.   

விபத்து நடந்த இடத்தில் கராச்சி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் அதிக அளவில் நடமாட்டம் இருந்துள்ளது. மீட்பு பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். இதில், எரிவாயு கசிவு காரணமாக வெடி விபத்து நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வெடிபொருள்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.

முன்னதாக, கராச்சியின் ஜின்னா காலனியில் செவ்வாயன்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக முதல்வர் அவரது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில் நடந்தது. தற்போது, மீண்டும் மற்றொரு வெடிவிபத்து நடந்துள்ளது.
 

;