tamilnadu

img

போகோஹராம் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்.... நைஜீரியாவில் 60 பேர் பலி

நைஜர்
ஆப்பிரிக்க கண்டத்தில் போகோஹராம் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. நைஜீரியா நாட்டின் மைய பகுதியில் நிலை கொண்டிருக்கும் இந்த பயங்கரவாத படை பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என யாரை கண்டாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்கிறார்கள். இல்லையென்றால் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு கொத்துக்கொத்தாக மனித உயிர்களை காவு வாங்குகின்றனர்.

இந்நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் இருவேறு இடங்களில்  போகோஹராம் தீவிரவாதிகள் நிகழ்த்திய தொடர் தாக்குதலில் 20  பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 60 பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐநா சபை கண்டனம்  தெரிவித்துள்ளது.  

;