tamilnadu

img

பாகிஸ்தான் ரயில் பேருந்து மோதி விபத்து - 20 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின்  கராச்சி நகரில் இருந்து சர்கோதா நகரம் நோக்கி 50-க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று இரவு பேருந்து  ஒன்று  சென்று கொண்டிருந்தது. சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை அந்த பேருந்து கடக்க முயன்ற போது தண்டவாளத்தில்,  ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி  வந்துகொண்டிருந்த 'பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்’ ரயில் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. ரயிலின் என்ஜினில் சிக்கிய பேருந்து 150- 200 அடி தொலைவுக்கு இழுத்துச்செல்லப்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர்,  படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும்  என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;