tamilnadu

img

பாகிஸ்தானில் விஷவாயு தாக்கி 14 பேர் பலி

பாகிஸ்தானில் விஷவாயு தாக்கிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின்  கராச்சியில் உள்ள கேமாரி துறைமுகத்துக்கு வந்த சரக்கு கப்பலில் கொண்டு வரப்பட்ட காய்கறிகள் நிரப்பப்பட்ட கண்டெய்னரை ஊழியர்கள் இறக்கினர். பின்னர் அந்த கண்டெய்னர் அருகில் உள்ள சந்தைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு காய்கறிகளை தரம் பிரித்து, கடைகளுக்கு கொடுப்பதற்காக ஊழியர்கள் கண்டெய்னரை திறந்தனர். அப்போது கண்டெய்னரில் இருந்து விஷ வாயு வெளியேறியது.
விஷ வாயு தாக்கியதில் சுமார் 30 பேர் மூச்சு திணறலுக்கு உள்ளாகி சுருண்டு விழுந்தனர். அவர்கள் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் ஆனால் செல்லும் வழியிலேயே 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் கண்டெய்னரில் இருந்த வி‌‌ஷ வாயு தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்னர். 

;