tamilnadu

img

கொரோனா வைரஸ் : இத்தாலியில் பலி எண்ணிக்கை 8,215 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 8,215 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 5,37,000ஐ தாண்டியுள்ளது; பலி எண்ணிக்கை 21,000ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,589 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 8,215 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக இத்தாலி உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா வைரசால்  ஸ்பெயினில் 4,365 பேர் பலியாகி உள்ளனர்; 57,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 3,292 பேர் பலியாகி உள்ளனர்; 81,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.