tamilnadu

img

வங்கிகள் இணைப்பிற்கு ஊழியர்கள் எதிர்ப்பு

புதுதில்லி, ஆக.31- நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கி களை, 12ஆகக் குறைப்பது என்பது நாட்டில் உள்ள கோடானுகோடி மக்களைக் கடுமை யான பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்திருக்கிறது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பொதுத்துறை வங்கிகளைக் குறைப்பது என்பது கோடானுகோடி மக்களுக்கு வங்கி களின் வசதிகள் சென்றடைவதில் பாதிப்பு களை ஏற்படுத்திடும். இப்போதேகூட உலகில் வங்கிப் பரிவர்த்தனை மிகுதியாக இல்லாத நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்துவருகி றது. இந்நடவடிக்கை கிராமப்புற மக்களின் சிறுசேமிப்பு பழக்கத்தை, கடுமையாகத் தாக்கும். மோசமான தனியார் சீட்டு கம்பெனி கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் பக்கம் தள்ளிவிடும். 

பொதுத்துறை வங்கிகளை பலவீனப் படுத்துவது என்பதன் பொருள், தேசியமய மாக்கப்பட்ட வங்கித்துறையைத் தனியார் பக்கம் தள்ளிவிடுவது என்பதேயாகும். வங்கி களை இணைப்பது என்பது வங்கிக்கிளை களின் எண்ணிக்கையைச் சுருங்கச் செய்தி டும். இதில் மிகவும் பாதிக்கப்படுவது கிரா மப்புற இந்தியாவேயாகும். சமீபத்தில் பல வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த பின்பு, சுமார் ஆயிரம் கிளைகள் மூடப்பட்டு விட்டன. தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வற்றை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைத்த தன் மூலம் 800 கிளைகள் மூடப்பட இருக் கின்றன. இவ்வாறு வங்கிகளை இணைத்து அவற்றைப் பெரிதுபடுத்தியபின்னர் அவற்றைத் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. மேலும் அரசாங்கம் பொதுத்துறை வங்கி களில் உள்ள பிரச்சனைகளையும் மூடி மறைத்துக்கொண்டிருக்கிறது. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாத கயவர்களின் பட்டியல் (அதாவது பெரிய கார்ப்பரேட்டுகளின் பட்டியல்) மிகவும் நீண்ட தாகும். அவர்களிடமிருந்து கடன்களை வசூ லித்திட அரசாங்கம் எவ்வித நடவடிக்கையை யும் எடுத்திடவில்லை. இவர்கள் வங்கி களுக்குச் செலுத்த வேண்டிய பணத்தின் மதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது குறைந்தபட்சம் 5.5 லட்சம் கோடி ரூபாய் அள விற்கு அவர்கள் வங்கிகளுக்குத்திருப்பிச் செலுத்தாமல் சூறையாடியிருக்கிறார்கள். இந்தத் தொகை முழுவதையும் வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. வங்கிகள் இணைக்கப்படுவதன் மூலம் இப்பிரச்சனைக்கு எவ்விதத்திலும் தீர்வு கண்டிட முடியாது.

இந்த ஆண்டு வங்கிகள் தேசியமய மாக்கப்பட்டதன் 50ஆவது ஆண்டாகும். இந்த ஆண்டில் மக்களின் நலன்களுக்காக, பொதுத் துறை வங்கிகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்ப தற்குப் பதிலாக, மத்திய மோடி அரசாங்கம் இதனை கைகழுவுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. வங்கி ஊழி யர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனை த்து ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலமாக இந்நாசகர நட வடிக்கையைத் தடுத்து நிறுத்திட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.      (ந.நி.)

‘கார்ப்பரேட்டுகளுக்கு கடன் கொடுப்பதற்காகவே இணைக்கிறார்கள்’

பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.எச்.வெங்கடாசலம், சி.பி.கிருஷ்ணன், கிருபாகரன்  உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

சென்னை, ஆக.31- பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுப்பதற்காக பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழ மையன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஆவேசப் போராட்டத் தில் ஈடுபட்டனர். மத்திய பாஜக அரசின் மோச மான பொருளாதாரக் கொள்கை மற்றும் நடவடிக்கையால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியும் பல்வேறு துறைகளில் வேலையிழப்புகளும் ஏற்பட்டு வருவதாக தொழிற்சங்கத்தி னரும் பொருளாதார வல்லுநர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தி யாவில் பொருளாதார மந்தநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. இதனை சரிசெய்வதற்கு பதி லாக மத்திய அரசு தொழிலா ளர்களையும் மக்களையும் பாதிக் கக்கூடிய வகையில் நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் வெள்ளியன்று பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது. அதன் படி பொதுத்துறை வங்கிகள் 12 வங்கிகளாக சுருக்கப்பட்டுள்ளன. வங்கிகளை இணைத்திருப்பதை மிகப்பெரிய ‘சீர்திருத்தமாக’ மத்திய பாஜக அரசு வீண்தம்பட்டம் அடித்து வருகிறது. 

ஆனால் வங்கிகளை இணைப்ப தற்கு வங்கி ஊழியர்களும் வங்கி ஊழியர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆட்குறைப்பு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ள தாக ஊழியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழி யர்கள் சங்கங்கள் சனிக்கிழமை யன்று நாடு தழுவிய கண்டன போரா ட்டத்தை நடத்தின. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட முக்கிய நகரங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டங்களில் ஈடு பட்டனர்.

நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல

இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்தின் (பெபி) மாநில பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறு கையில், வங்கிகளை இணைப்ப தால் நடுத்தர ஏழை மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுப் பதற்கு வசதியாகவே வங்கிகளை இணைக்கிறார்கள். இதற்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகிறோம். மத்திய அரசு மேலும் மேலும் பெரும் முதலாளிகளுக்கு சாதக மாகவே நடந்து கொள்கிறது. வங்கி கள் இணைக்கப்பட்ட பிறகு நடுத்தர மக்களுக்கு வழங்கி வரும் கடனை படிப்படியாக குறைத்து விடுவார் கள். இது நாட்டின் வளர்ச்சிக்கு நல் லது அல்ல. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பில் உள்ள 9 சங்கங்களும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்து கிறோம்.

7 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்படும் அபாயம்

போராட்டம் குறித்துஅகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடா சலம் கூறுகையில், இந்தியாவில் வங்கித் துறையை இணைப்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் கிடை யாது. ஆனால் இப்போது பெரிய பெரிய வங்கிகளை சேர்த்து இணைப் பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் சிறிய வங்கி கிளைகள் அனைத்தையும் மூடி விடுவார்கள். இதுவரை ஸ்டேட் வங்கியில் 7 ஆயிரம் கிளைகளை மூடியுள்ளனர். பெரும் முதலாளி களுக்கு கடன் கொடுப்பதற்கு வசதி யாக வங்கிகளை இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனால் சாதாரண மக்களுக்கு எந்த பலனும் கிடையாது என்றார்.