சென்னை, அக். 11- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளியன்று(அக்.11) காலையில் சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 29 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனையானது. பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்த நிலை, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த மாதம் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து, சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன்பின்னர், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.
இந்த மாத துவக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. எனினும் ஆபரண தங்கத்தின் விலை ரூ.29 ஆயிரத்திற்கு கீழ் குறையவில்லை. வியாழனன்று(அக்.10) சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்து 360 என்ற நிலையிலிருந்தது. ஒரு கிராம் ரூ. 3670 -க்கு விற்பனையானது. இந்நிலையில், வெள்ளியன்று(அக்.11) தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 256 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ரூ.29,104-க்கு விற்பனையானது. கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.3638-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு சரவன் 30 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 3795 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 900 குறைந்து ஒரு கிலோ ரூ.49 ஆயி ரத்திற்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் 49 ரூபாய்க்கு விற்பனையானது.