மதுரை, அக். 21- அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதியை ஒரு மாதமாக தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்கல்வி பாது காப்பு இயக்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.முரளி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் அரசு கலைக் கல் லூரிகளில் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுகள் செய்து வருகி றது. விண்ணப்பிப்பவர்கள் தங்க ளுடைய கல்வி சான்றிதழுடன் ஆசிரியர் பணிபுரிந்த அனுபவச் சான்றிதழையும் அரசுக்கு சமர்ப்பிக்கவேண்டும். அனுபவச் சான்றிதழுக்கு சான்றாக வருகைப் பதிவு அத்தாட்சியையும் இணைக்க வேண்டும்.
தவம்கிடக்கும் ஆசிரியர்கள்
ஆனால் பல சுயநிதிக் கல்லூரி கள் இந்த அனுபவச் சான்றிதழை யும், வருகைப் பதிவு அத்தாட்சியை யும் வழங்க மறுத்து வருகிறார்கள். சில கல்லூரிகளில் இதற்காக ரூ. 15000 முதல் 50000 வரையும் கேட்ப தாகத் தெரிகிறது. சில கல்லூரி களில் அந்த ஆசிரியர்களை கல்லூரி அதிகாரிகளைச் சந்திக்க அனு மதிப்பதே இல்லை. பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30-10-19 என்று அறி விக்கப்பட்டுள்ள நிலையில், பல கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் தாங்கள் பணிச் சான்றிதழைப் பெற தவம் கிடக்கி றார்கள்.
இதில் கல்லூரி இயக்குநரும் மற்றும் அந்தந்தப் பகுதி இணை இயக்குநர்களும் உடனடியாக தலையிட்டு ஆவன செய்யவேண் டும் என்று தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம் அரசை வேண்டுகிற வேளையில், விண் ணப்பிக்கும் தேதியை உடனடியாக ஒரு மாதமாவது தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோருகிறது. அப்போதுதான் பணிச் சான்றிதழை தாங்கள் பணி புரிந்த நிர்வாகத்திட மிருந்து பெற இயலாத ஆசிரியர்கள் அரசின் தலையீட்டுடன் பெற முடியும்.
அதிகார அமைப்பு தேவை
மேலும் இம்மாதிரிப் பணி சான்றி தழ்களை தர மறுக்கும் அல்லது வேண்டுமென்றே தாமதப்படுத்தும் கல்லூரிகள் பற்றி முறையிட ஒரு குறை போக்கும் அதிகார அமைப்பை அரசு உடனடியாக ஏற்ப டுத்தக் கோருகிறோம். பணி சான்றி தழ் தர மறுக்கும் மற்றும் அதற்காக விலை பேசும் நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வும் கோருகிறோம். மிகக் குறைந்த ஊதியத்தில் கடு மையாக பல ஆண்டுகள் பணியாற்றி தங்களுக்கு ஒரு விடிவுகாலம் ஏற்படு கிறது என்று நினைத்த பல ஆசிரி யர்கள் மிகுந்த மன உளைச்சலில் தவிப்பதற்கு தமிழக அரசு உடனடி யாக தீர்வு காண வேண்டுகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.