tamilnadu

img

மான்புக்கர் பரிசு : ஓமன் நாட்டு பெண் எழுத்தாளர் வென்றார்

லண்டன்

இலக்கியத்துக்காக (நாவல்) வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான "மான்புக்கர்" பரிசை பிரிட்டன் அரசு வழங்கி வருகிறது.


இந்த விருது 50 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டிற்கான சிறந்த நாவலாக ஓமன் நாட்டை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஜோக்ஹா அல்ஹார்த்ஹி எழுதிய ‘செலஸ்ட்டியல் பாடீஸ்’ (புனிதமான உடல்கள்) தேர்வானது.


லண்டன் நகரில் நேற்று நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் ஜோக்ஹா அல்ஹார்த்ஹிக்கு மான்புக்கர் கேடயத்துடன் 50 ஆயிரம் பவுண்டு (ரூ4.4 லட்சம்) ரொக்கம் வழங்கப்பட்டது.

40 வயதாகும் ஜோக்ஹா அல்ஹார்த்ஹி மான்புக்கர் பரிசை பெறும் முதல் அராபிய எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

;