tamilnadu

img

ஆப்கன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது தாக்குதல்: 6பேர் பலி - ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில்,”ஆப்கான் தலைநகர் லாகூரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை தீவிரவாதிகள்  தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது
 

;