tamilnadu

img

ஆஸ்திரேலியா காட்டுத் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் பலி

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 700 வீடுகள் இரையாகி உள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வியாழன்று தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்துள்ளனர். அக்டோபர் மாதம் முதல் காட்டுத் தீக்கு பலியான தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்களின் மறைவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.