ஆம்பூர், ஜூலை 26- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாங்கிசாப் பகுதியில் வசித்து வருபவர் ரியாஸ். இவர் அதே பகுதியில் காலணி உதிரிபாகங்கள் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் வழக்கம்போல் சனிக்கிழமை இரவு குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்த குடோனில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவி யது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தீய ணைப்பு நிலையத்திற்கும், உமராபாத் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித் தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.