ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் வாகனத்தில் குண்டு வெடித்ததில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு ஆப்கானிஸ்தானில் வானொலி பத்திரிகையாளரின் வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு இன்று அதிகாலை வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பத்திரிகையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தெற்கு ஹெல்மண்ட் மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் ஓமர் ஸ்வாக் கூறுகையில்,
பத்திரிகையாளர் எலியாஸ் தயீயின் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த குண்டு அவர் உயிரை பறித்துள்ளது. மேலும் அவரது சகோதரர், குழந்தை மற்றும் மேலும் ஒருவர் என 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த படு கொலை சம்பவம் குறித்து வானிலை நிலைய தலைவர் சாமி மஹ்தி தனது டுவிட்டர் பதிவில்,
எனது சகாவும் அன்பான நண்பருமான எரியாஸ் இன்று பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் மாகாண தலைநகர் லஷ்கர் காவில் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.