அசாமில் ஆணின் சிறுநீர் பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஆலோசகரும், அறுவை சிகிச்சை நிபுணரான வாலியுல் இஸ்லாமிடம் சில நாட்களுக்கு முன்பு மொபைல் சார்ஜர் கேபிளை தவறாக உட்கொண்டதால் அவருக்கு வயிற்று வலி இருப்பதாகத்
சிகிச்சைக்கு வந்தார். இதையடுத்து
இதைத்தொடர்ந்து டாக்டர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்து உள்ளார்.ஆனால் அவரது இரைப்பைக் குழாயில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நோயாளி தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக கூறவே அதை தொடர்ந்து முழு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது அப்போது நோயாளியின் சிறுநீர்ப்பையில் ஒரு மொபைல் சார்ஜரின் கேபிள் கார்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து டாக்டர் இஸ்லாம் கூறியதவது:-
அந்த நபர் தனது ஆண்குறி வழியாக மொபைல் சார்ஜிங் கேபிளை நுழைத்து உள்ளார். அது தற்போது அகற்றபட்டு நோயாளி குணமடைந்து வருகிறார். அந்த நபர் உண்மையைச் சொல்லி இருந்தால் அறுவை சிகிச்சையைத் தவிர்த்திருக்க முடியும். ஆண்குறி சிறுநீர்க்குழாய் வழியாக அதனை அகற்றி இருக்கலாம் என்ற தெரிவித்துள்ளார்.