tamilnadu

img

கொரோனா நோயாளிக்கு எக்ஸ்ரே எடுக்க அலைந்த உறவினர்

ஆந்திராவில் கொரோனா நோயாளிக்கு எக்ஸ்ரே எடுக்க உறவினர்கள் அவரை ஸ்டெக்சரில் வைத்து தெருத்தெருவாக அலைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக சென்றார். அவரை எக்ஸ்ரே எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் மருத்துவமனையில் எக்ஸ்ரே மிஷின் பழுதடைந்ததாக கூறப்பட்டது. அப்போது நோயாளியை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கூட இல்லாத சூழலிலல் ஸ்டெக்சரில் படுக்க வைத்து தெருத்தெருவாக அலைந்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் கர்னூல் மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே இயந்திரம் வேலை செய்யும் நிலையில் நோயாளிக்கு எக்ஸ்ரே எடுக்க மறுக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.