tamilnadu

img

மத்தியப்பிரதேசத்தில் காங்., ஆட்சியை கவிழ்க்கும் பாஜக

20 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் அரசியல் நெருக்கடி

போபால்,மார்ச் 10-  தேர்தல் மூலம் ஆட்சிக்குவர முடியாத மாநிலங்களில் ஆளுங் கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி யும் மத்திய அதிகாரத்தின் மூலம் அழுத்தம் கொடுத்தும் ஆட்சியைப் பிடிக்கும் மலிவான செயலை கர்நாடக மாநிலத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக அரங்கேற்றியுள்ளது.  மத்தியப்பிரதேசத்தில் காங் கிரஸ் தலைமையிலான ஆட்சி நடை பெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதலமைச்ச ராக உள்ளார். மத்தியப்பிரதேச சட்டமன்றத்திற்கு 2018 ஆம் ஆண்டில்  நடைபெற்ற  தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் 114  தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜ்வாதி எம்எல்ஏ, 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதர வுடன்  15 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. 

இந்நிலையில் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 20 எம்.எல்.ஏக்கள் செவ்வாயன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த  இவர்கள், தங்க ளது பதவி விலகல் கடிதத்தை ஆளு நர் மாளிகைக்கு அனுப்பி வைத்து ள்ளனர். இரண்டு மின்னஞ்சல்களில் எம்எல்ஏக்களின் பதவி விலகல் கடிதங்கள் இணைக்கப்பட்டு கிடைக்கப் பெற்றதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 

பாஜக சதி

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் போபாலில் செய்தியாளர்களிடம் கூறுகை யில், மத்திய பிரதேசத்தில் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது. மக்கள் தீர்ப்புக்கு எதிராக  பாஜக குறுக்கு வழியில் ஆட்சி யமைக்க முயன்று வருகிறது. சில  காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்க ளூருவுக்கு கொண்டு செல்ல பாஜக 3 விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.  பாஜக ஏற்பாடு செய்ததற்கான ஆதாரங்கள்  எங்களிடம் உள்ளன. மாஃபியாக் களுக்கு எதிராக கமல்நாத் நட வடிக்கை எடுத்ததால் தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது என்று தெரிவித்தார்.

விலகியவரை நீக்கிய காங்.,

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகக் கூறி, தனது ராஜினா மா கடிதத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஜோதி ராதித்ய சிந்தியா அனுப்பியுள்ளார். ஜோதிராதித்ய சிந்தியா சில மாதங்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி யின் அடையாளத்தை நீக்கினார். மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் செவ்வாயன்று காலை தில்லியிலுள்ள தனது இல்லத்திலிருந்து காரில் கிளம்பிய ஜோதிராதித்யா சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.  அப்போது உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான அமித் ஷாவும் உடனிருந்தார். அதில், பாஜகவில் இணைவது குறித்து ஜோதிராதித்ய சிந்தியா பேசியிருக்கலாம் என்று தில்லி வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஜோதிராதித்ய சிந்தியாவை கட்சியில் இருந்து நீக்கி, மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கையை கட்சித் தலைமை ஏற்றுக் கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செய லாளர்  வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், ஜோதிராதித்ய சிந்தியா  கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்., கமல்நாத் அரசுக்கு சிக்கல் 

20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் 114 எம்எல்ஏக்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசின் பலம் 94 இடங்களாகக் குறைந்துவிடும். இரண்டு எம்எல்ஏக்கள் பதவி காலி யாக உள்ளது. இதனால் சட்டமன்ற த்தில் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 208 ஆக இருக்கும். எனவே பெரும் பான்மையை நிரூபிக்க 105 இடங்கள் போதுமானதாகும். தற்போது பாஜகவின் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 107 ஆகும்.  காங்கிரஸ் கட்சிக்கு 94 எம்எல்ஏக் கள் மற்றும் 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜ்வாதி எம்எல்ஏ, 4 சுயேச்சை எம்எல்ஏக்கள்  ஆதரவுடன்  101  எம்எல்ஏக்களின் பலம்தான் இருக் கும். எனவே பெரும்பான்மையை நிரூபிக்க 4 எம்எல்ஏக்கள் குறை வாக உள்ளது. இதனால் கமல்நாத் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.