புலம்பெயர் தொழிலாளர்களை வஞ்சித்த அமைச்சர்
பெங்களூரு, மே 25- புலம் பெயர் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய உணவுப் பொருட்கள் அடங்கிய 23,000 பெட்டிகளை பாஜகவினர் பதுக்கி வைத்து கடத்த முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ள னர். பெங்களூரு நகரில் பல லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். கோவிட்- ஊரடங்கால் வருவாய் இழந்து உணவுக்கு வழியின்றி தவித்து வரு கின்றனர். அவர்களுக்கு பெங்களூரு மாநகராட்சியும் தொழிலாளர் நலத்துறையும், பல்வேறு அமைப்புக ளின் துணையுடன் உதவி வருகின்றன. சமைத்த உணவை பொட்டலங்களாக்கி தொழிலாளர்களின் வசிப்பிடங்களில் வழங்கினர். அதுபோல் 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய 12 கிலோ கிட்டுகளும் (பெட்டி கள்/பைகள்) வழங்கப்பட்டு வருகின்றன. தொழி லாளர்களிடம் உணவு பொட்டலங்களையும், உணவுப் பொருட்களையும் கொண்டு சேர்க்கும் பணியை தன்னார்வலர்களாக அனைத்துக் கட்சியி னர், தொழிற்சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரு கிழக்கு பகுதியான ராமமூர்த்தி நகரில் லோட்டஸ் திருமண மண்ட பத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு லாரிகளில் கடத்தப் படுவதாக சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தி னருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அங்கு சென்றபோது பாஜகவைச் சேர்ந்த ஒரு கும்பல் லாரியில் அவற்றை கடத்த முயன்றது தெரிய வந்தது. உடனடியாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் உட்பட ஏராளமானோர் திரண்டனர். காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து லாரியுடன் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மண்டபத்துக்கும் சீல் வைத்தனர்.
இந்த கடத்தலில் கர்நாடக நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி பசுவராஜ்-க்கு தொடர்பு உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இவர் 2018இல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்த்து பாஜகவில் இணைந்து அமைச்ச ரானவர். உணவுப் பொருட்களை தனது தொகுதியில் உள்ள மக்களுக்கு வழங்க எடுத்துச் செல்ல முயன்ற தாக சமாளித்தாலும், புலம் பெயர் தொழிலாளர்க ளை வஞ்சித்து பாஜக அமைச்சரே மோசடி செய்துள் ளது அம்பலமாகி உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவ ரங்கள் தெளிவாக இல்லாத நிலையில் அவர்க ளுக்கென மத்திய அரசு வழங்கும் நிதியில் பெரும் பகுதி பாஜகவினரின் பைகளை நிரப்பவும், வாக்கு வங்கி அரசியலுக்குமே பயன்படும் என்பதற்கு பெங்களூரு சம்பவம் சாட்சியமாக உள்ளது.