அரியலூர், ஆக.3- தொழிற்கடன், தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புபவர்கள் மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயி ல்வதற்கான கல்வி கடன் பெற விரும்புப வர்கள் விண்ணப்பிக்கலாம். அரியலூர் மாவட்டம் உடையார்பாளை யம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் ஆக.6 அன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம் கோலோன் மேளாவில் விண்ண ப்பங்கள் பெற்று பயன்பெறலாம். கடன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பி ற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் விண்ணப்பபிக்கலாம். வயது 18 முதல் 60-க்குள் இருத்தல் வேண்டும். ஆண்டு வரு மானம் கிராமப் புறமாயின் ரூ.81 ஆயி ரத்துக்கு உட்பட்டும், நகர்ப்புறமாயின் ரூபாய் ஒரு லட்சத்து உட்பட்டும் இருக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றி தழ், வருமானச் சான்றிதழ் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகியவை இணைக்க ப்பட வேண்டும். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதி வாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெ றுமாறு ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.