tamilnadu

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூட்டம்

அரியலூர், நவ.7- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் அரியலூர் மாவட்டக்குழு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் கே.மகாராஜன் தலைமையில் நடைபெற்றது.  எதிர்கால பணிகள் பற்றி மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் பேசினார். மாநிலக்குழு முடிவுகள் மற்றும் களத்தில் எவ்வாறு செயலாற்றி திட்டமிட்டபடி செயல்படுத்தும் விதம் பற்றி மாநிலத்தலைவர் த.செல்லக்கண்னு பேசினார். ஆர்.சிற்றம்பலம், எஸ்.மலர்கொடி, எ.தங்கராசு, எஸ்.சாமிதுரை, எம்.பரமசிவம், சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.