tamilnadu

img

ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது கட்டாயமில்லை: அமைச்சர்

சென்னை,நவ.23- அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தை களை அரசுப் பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என கட்டாயமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறும் விவகாரத்தில் அனைத்து சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்க ளின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை. 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்க ளுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும்.