குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜெயங்கொண்டம் அண்ணா சிலை முன்பு கையெழுத்து இயக்கம் துவங்கியது. திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், திராவிட கழக மண்டலத்தலைவர் சி.காமராஜ், மதிமுக மாவட்டப் பொருளாளர் புகழேந்தி மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக மக்கள் கூட்டணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.