அரியலூர், ஜூலை 12- அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சவீதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் வட்டாரத்தில் நடப்பாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பொட்ட வெளி, சென்னவனம், ராயம்புரம், ஒட்டக்கோவில், கோவிந்தபுரம், அமீனாபாத், அரியலூர் (வடக்கு), அரியலூர் தெற்கு வாலாஜாநகரம், கயர் லாபாத், கல்லங்குறிச்சி, பெரியநாகலூர், தேளூர், காவா னூர், விளாங்குடி, ரெட்டிபாளையம், அருங்கால், புங்கங்குழி ஆகிய வருவாய் கிராமங்களில் பயறு வகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.9 ஆயிரத்து 250-ம், எள் மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடி செய்யும் விவசாயிக ளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் என பின்னேற்பு மானியமாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நிலம், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்ய ப்படாத சொந்த பட்டா தரிசு நிலமாக இருக்க வேண்டும். இதற்கான சான்றினை தங்கள் பகுதி கிராம நிர்வாக அதிகாரியிடம் கடந்த 5 ஆண்டுக ளுக்கும் மேலாக சாகுபடி செய்யாத தரிசு என சான்று பெற்று வர வேண்டும். மேலும் தங்களது ஆதார் நகல், சிட்டாநகல், அடங்கல்நகல், வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் ஆகியவை இணைத்து தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் கொடுத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.