அரியலூர், ஜூன் 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் கே.மகாராஜன் தலை மையில் அரியலூரில் நடைபெற்றது. மாநி லக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளை தடுத்திட வும், மாவட்டம் முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்திடவும், மருத்துவர், செவிலியர், தூய்மை பணி யாளர், காவல்துறை உள்ளிட்ட அனை வருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும். நலவாரியத்தின் முலம் அமைப்புச் சாரா தொழிலாளர் அனை வருக்கும் நிவாராண தொகையை உடனே வழங்க வேண்டும். வரும் ஜூன் 9 தேதி இடதுசாரிகள் நடத்தும் இயக்கத்தினை வெற்றிக்கரமாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.