அரியலூர், ஆக.8- பெண்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதை கண்டித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் மீனா தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜ குமாரி, உஷா, மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா, அரியலூர் மாவட்டச் செயலாளர் பி.பத்மாவதி, மாவட்டத் தலைவர் எஸ்.பாக்கியம், மாவட்ட துணைத் தலைவர் ஏ.கலையரசி, மாவட்டப் பொரு ளாளர் ஏ.கல்யாணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஜெயங்கொண்டம் ஒன்றி யச் செயலாளர் கே.அம்பிகா நன்றி கூறி னார்.