tamilnadu

img

குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு சிபிஎம் மற்றும் முஸ்லிம்கள் அமைப்புகள், திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன், மாதர் சங்க ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் அ..பல்கீஸ், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.