tamilnadu

அரியலூர், தரங்கம்பாடி,புதுக்கோட்டை, தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

அறிவியல் கண்காட்சி
அரியலூர், செப்.9- அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த குலனு டையான் கிராமத்தில் உள்ள கோகிலாம்பாள் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. இதற்கு அரியலூர் ஆட்சியர், டிஜிபி தலைமை தாங்கினர். கண்காட்சியை தொடங்கி வைத்தார். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.  வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புக ழேந்தி, உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலு வலர் மணிவண்ணன் அறிவியல் கண்காட்சியை பார்வை யிட்டனர். ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் பள்ளி தாளாளர் அன்பழகன் நிர்வாக இயக்குனர் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக மெட்ரிக் பள்ளியின் முதல்வர் வர வேற்றார். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ராஜேஷ் குமார் நன்றி கூறினார்.

குறைந்த மின் அழுத்த விநியோகம் பொதுமக்கள் பாதிப்பு
தரங்கம்பாடி, செப்.9- நாகை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள காட்டுச்சேரி பகுதியில் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதி மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பி னர் குணசேகர் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குறை மின் அழுத்தத்தில் மின்சாரம் இப்பகுதிக்கு விநியோகம் செய்யப்படுவதால் ப்ரிட்ஜ், கிரைண்டர், பேன் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் பழுதாகி வரு கின்றன. குறிப்பாக காட்டுச்சேரி, வடக்குத்தெரு, வடக்கு காலனி பகுதியில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பலமுறை மின் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.  இப்பகுதிக்கு மின்சாரம் விநியோகிக்கும் தில்லை யாடி துணைமின் நிலையம் அருகிலேயே இருந்தும் எந்த பயனும் இல்லை. உடனடியாக இப்பகுதிக்கு தனியாக மின்மாற்றி அமைக்க வேண்டும். உரிய நடவடிக்கை இல்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி 
அறந்தாங்கி, செப்.9- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உலக எழுத்தறிவு மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் திட்டம் அவதாரம் 2 “நாய கன்” ஆசிரியர்களுக்கு உள ரீதியான பயிற்சி அளிக்கப் பட்டது. ரோட்டரி கிளப் சார்பாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். துணை ஆளுநர் கராத்தே கண்ணையன் முன்னிலை வகித்தார். அறந்தாங்கி கல்வி மாவட்ட அலு வலர் திராவிடச் செல்வம், கவர்னர் சிறப்பு திட்டத் தலை வர் பெலிக்ஸ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாமரை செல்வன், கார்த்திகா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு பேரா. குருமூர்த்தி பயிற்சி வழங்கி னார். முன்னாள் தலைவர்கள் ஆறுமுகம், சாத்தையா, அபு தாலிபு, வருங்கால தலைவர்கள் ராமன், பரத்வாஜ், வீர மணிகண்டன், உறுப்பினர்கள் வீரமாகாளியப்பன், அசோக் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் செலக்சன் பள்ளி ஆசிரியர்கள், பிரிய லிண்ட் பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி ஆசி ரியர்கள், எக்ஸ்லண்ட் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண் டனர். நிறைவாக செந்தில்குமார் நன்றி கூறினார்.

செப்.14-இல் வாகன விபத்து வழக்கிற்கான லோக் அதாலத் 
தஞ்சாவூர், செப்.9- கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு செப்.14-ல் தேசிய லோக் அதாலத்தில் தீர்வு காணலாம். இதுகுறித்து, கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கூறுகையில், “வரும் செப்.14-ல் காலை 10 மணிக்கு மாநில சட்டப்பணிகள் குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை, அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காண தேசிய லோக் அதா லத் நடைபெற உள்ளது.  இதில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்ப கோணம் தொடர்பான மோட்டார் வாகன விபத்து வழக்கு தொடர்பாக சமரசத் தீர்வு கண்டு சம்பந்தப்பட்டவர்கள் பயனடையலாம். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக, கும்பகோணம் மண்டலம்: 0435-2403724-26, 90432-38312, 86675-90214, திருச்சி மண்டலம்: 0431- 2415551-54, 94878-98057, 98945-91570, காரைக்குடி மண்ட லம்: 04565-234125-26, 94878-98095, 94878-98103, புதுக் கோட்டை மண்டலம் 04322-266111, 94878-98065, 88706-11267 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.