அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியா மாகாணத்தின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளின் வடக்கில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 40 ஏக்கர் அளவிலான நிலங்கள் காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன. மேலும், மலைப் பகுதிகளைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் காட்டுத் தீயால் சேதம் அடைந்துள்ளன. பலமாக காற்று வீசி வருவதால், காட்டுத் தீ வேகமாக பரவுகிறது. இந்நிலையில், மலைப் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் கரும்புகையால் மூடப்பட்டுள்ளன.
தீயை அணைக்க தீயணைப்பு படை வீரர்களும், மீட்புப்படையினரும் போராடி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர்கள், ஏர் டேங்கர்கள் முயற்சியோடு தீயை அணைத்து வருகின்றனர்.