tamilnadu

img

மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு... அமெரிக்காவில் 5 பேர் பலி

மில்வாக்கி
அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தின் முக்கிய நகரான மில்வாக். இந்த நகரில் உள்ள மதுபான விடுதியில் புதனன்று மர்மநபர் ஒருவர் விடுதியில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட நபர் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினார் எனத் தெரியவில்லை. இதுகுறித்து மில்வாக் நகர போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

;