tamilnadu

img

அப்பவால் மூச்சு விட முடியவில்லை-ஜார்ஜ் பிளாய்ட் மனைவி உருக்கம்

அமெரிக்காவில் காவல் துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் மனைவி ரோக்ஸி வாஷிங்டன் முதல்முறையாக  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது
ஜார்ஜ்  நல்ல மனிதர். எங்களுக்கு நீதிவேண்டும் என்று கண்ணீர் சிந்தியவாறே தெரிவித்தார். 
என் மகள் கியானா பிறந்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். குழந்தையை அவ்வளவு நேசித்தார். அவள் அழுதால் உடனே எழுந்து விடுவார் மிகவும் நேசித்தார். வேலைக்காகத்தான் அவர் ஹுஸ்டன் இருந்து மினசோட்டா சென்றார். அவர் லாரி வேலை செய்வதாக இருந்தார். போலீஸ் அதிகாரிகள் 4 பேர் இருந்தனர். அதில் ஒருவரை தவிர மற்றவர்கள் ஏன் குற்றம் சாட்டப்படவில்லை. தொடர்ந்து நீதிக்காக போராடுவேன் எங்களுக்கு நீதி வேண்டும் என்று கண்கலங்கினார். 
மேலும் அவர் கியானா என்னிடம் டிவியில் ஏன் அப்பா பெயரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்? mmஅப்பா எப்படி இறந்தார் என்று கேட்கிறார். நான்  அவளிடம் சொன்ன ஒரே விஷயம் அப்பாவால் சுவாசிக்க முடியவில்லை என்பது மட்டுமே என்று கூறியுள்ளார்.