கலிபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் பலத்த காற்று வீசி வருவதால், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காட்டுத் தீ பரவி வருகிறது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பை கருதி, அம்மாகாணத்தின் கவர்னர் கேவின் நியூசோம் அவசர நிலை அறிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் இறங்கி உள்ளனர். காட்டுத் தீயை கூடிய விரைவில் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் சோனோமா கவுண்டியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவர்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சுமார் 30,000க்கும் அதிகமான நிலங்களில் தாவரங்கள் எரிந்து நாசமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.