tamilnadu

img

அமெரிக்காவில் குடியேறியும் வறுமையில் வாடும் 5 லட்சம் தெற்காசியர்கள்

புதுதில்லி:
தெற்காசிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்களில், சுமார் 5 லட்சம் பேர் வறுமையில் வாடிக் கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.‘சவுத் ஆசியன் அமெரிக்கன் லீடிங் டூகெதர்’ (South asian americans leading together- (SAALT) என்ற நிறுவனம், இது தொடர்பான ஆய்வுகளை நடத்தி,அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தெற்காசியாவிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 2010-ஆம் ஆண்டில் 35 லட்சத்திலிருந்து 2017ஆம் ஆண்டில் 54 லட்சமாக அதி
கரித்துள்ளது. குறிப்பாக, 2010 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில்அமெரிக்க வாழ் இந்தியர்களின் மக்கள் தொகை 38 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. இதேபோல நேபாளிகளின் எண்ணிக்கை 206.6 சதவிகிதமும், பூட்டான் மக்களின் எண்ணிக்கை 38 சதவிகிதமும், பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை 33 சதவிகிதமும், வங்கதேசத்தினர் எண்ணிக்கை 26 சதவிகிதமும், இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.அமெரிக்காவிலுள்ள சுமார்6 லட்சத்து 30 ஆயிரம் இந்தியர்கள்தங்களது விசாவைப் புதுப்பிக்காமல் உள்ளனர். இவ்வாறு விசாவைப் புதுப்பிக்காதவர்களின் எண்ணிக்கை 2010-ஆம் ஆண்டிலிருந்து 72 சதவிகிதம் அளவிற்கு உயர்ந் துள்ளது. 2016-ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் தங்களது விசாவைப் புதுப்பிக்காமல் அமெரிக்காவில் வசித்துள்ளனர்.தெற்காசியாவிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் வாழும்மக்களில் சுமார் 4.74 லட்சம் பேர் வறுமையில் வாழ்கின்றனர்.இவ்வாறு ‘சவுத் ஆசியன் அமெரிக்கன் லீடிங் டூகெதர்’ ஆய்வில் கூறப்பட்டுள்ளது.