tamilnadu

img

சிபிஎம், வாலிபர் சங்கம் சார்பில் மளிகைப் பொருட்கள் வழங்கல்

அன்னூர், மே 10 - அன்னூர் பேரூராட்சி பகுதியில் ஞாயிறன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 600 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட் கள் வழங்கினர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக 144 தடை உத்தரவு விதிக்கப் பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய குடும்பத்தினர் உண வின்றி தவித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அன்னூர் பேரூ ராட்சி பகுதியில் 600 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொ ருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவைகள் வழங்கப் பட்டது. இதில் அன்னூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சௌந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றிய செயலாளர் முசிர், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் மணிகண்டன், வாலிபர் சங்க நிர்வாகி கள் சந்தோஷ் மற்றும் நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அவிநாசி
அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சி பகுதி யில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில் 500 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சிஐடியு மாநில  துணைத்தலைவர் எம். சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி. முத்துச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.முருகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேவிகா, பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

;