அசாமில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூத்த பத்திரிகையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் நரேஷ் மித்ரா. இவர் கடந்த மாதம் அலுவலகத்திற்கு வெளியே மயக்கம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கோமாநிலையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ் மித்ரா இன்று காலை உயிரிழந்தார்.
நரேஷ் மித்ராவை தாக்கியவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.