கவுகாத்தி, ஜூலை 19- வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் காசிரங்கா உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கி யது. இந்த வெள்ளத்தில் சிக்கி 9 காண்டாமிருகங்கள் உள்பட 108 விலங்குகள் பலியாகின. இதுகுறித்து காசிரங்கா பூங்காவின் இயக்குநர் செய்தியாளர்களி டம் கூறுகையில், காசிரங்கா பூங்காவின் 80 சதவீதப் பகுதி இன்னும் வெள்ளத்தில் மூழ்கியே காணப்படுகிறது, வெளியேறி சென்ற காண்டாமிருகங்கள் மீண்டுவிட்டன. இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 9 காண்டாமிருகங்கள் 108 உட்பட விலங்குகள் பலியாகியுள்ளன. நாங்கள் 136 விலங்குகளை காப்பாற்றியுள்ளோம். வெள்ளம்வடியத் துவங்கியிருப்பதால் இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று நினைக்கிறோம். சரியான பலி எண்ணிக்கைக்காக எல்லாப் பகுதிகளி லும் கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.