tamilnadu

img

சிஏஏவை ஆதரித்துக் கடிதம் எழுதவாம்... குழந்தைகளை மிரட்டும் உள்ளூர் பாஜகவினர்

அகமதாபாத்:
குடியுரிமைச் சட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு கடிதங்களை எழுதி அனுப்புமாறு, பள்ளிக் குழந்தைகளுக்கு பாஜக-வினர் மிரட்டல் விடுத்த சம்பவங்கள் குஜராத்தில் நடந் துள்ளன.திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகநாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் இப்போராட் டத்தில், மத வேறுபாடின்றி பங்கேற்று தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். மறுபுறத்தில், குடியுரிமைச் சட்டத்தை ஆதரிப்பதாக, பாஜகவினரும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்தான், குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவு தருகிறோம் என்றுபிரதமர் மோடிக்கு கடிதங்களை எழுதி அனுப்புமாறு, குஜராத் மாநிலத்திலுள்ள பள்ளிக் குழந்தைகளை, பாஜகவினர் மிரட்டியுள்ளனர். உள்ளூர் பாஜக-வினர், ஆங்காங்கே உள்ள பள்ளிகளுக்கு சென்று இந்த நிர்ப்பந்தத்தை அளித்து வருவதாக கூறப்படுகிறது. மிரட்டலுக்குப் பயந்து சில பள்ளிகள், கரும்பலகையில், சிஏஏஆதரவு கடிதத்தை எழுதிப்போட்டு, அதனை மாணவர்களை நகலெடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தலா 50 அஞ்சல் அட்டைகளாவது பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று பாஜக-வினர் நிர்ப்பந்தம் செலுத்தியுள்ளனர். இது பல இடங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

;