tamilnadu

img

போலிச்சாமியார் நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமம் இடிப்பு

அகமதாபாத்:
அகமதாபாத்தில் உள்ள போலிச்சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.  ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும் பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரை யடுத்து நித்தியானந்தாவை கைது செய்ய குஜராத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையறிந்த நித்தி யானந்தா வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார். அவருடைய ஆசிரமம் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமான நில ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்தை இடிக்கவும் அதன் சொத்துகளை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். நான்குநாட்களுக்கு முன் இடிப்பதற்கான பணிகள் தொடங்கின. புதனன்று ஆசிரமம் முழுவதுமாக இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டது.

;