விழுப்புரம், டிச. 24- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவர் விவசாயி வி.சுந்தரமூா்த்தி (55). இவா் அதே கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள தனது ஒரு ஏக்கா் நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழை பயிரிட்டிருந்தார். வாழை நன்கு செழித்து வளா்ந்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வந்த காட்டுப் பன்றிகள் வாழையை கடித்து சேதப்படுத்தி சென்றுள்ளன. இதுகுறித்து சுந்தரமூா்த்தி கூறுகையில், ஆற்றங்கரையோரம் உள்ள எனது நிலத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வாழைக் கன்றுகள் நடவு செய்திருந்தேன். தென்பெண்ணை ஆறு வழியாக நள்ளிரவு வந்த காட்டுப் பன்றிகள், தோட்டத்துக்குள் புகுந்து வாழைக் கன்றுகளை சேதப்படுத்திச் சென்றுள்ளன. இதனால் 30 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.