காரியாபட்டி, மே 13- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவரு கிறது. இப்பள்ளி ஊரிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக காட்டுப் பகுதியில் உள்ளது. இந்தப் பள்ளிக்கு காவலாளி கள் கிடையாது. பள்ளி வளாகத்திற்குள் அதே பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. வழக்கம் போல அங்கு வந்த மாணவர்கள், பள்ளியின் கதவுகளில் உள்ள பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருப்பதைப் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு, பள்ளி ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்த போது, கீழ் தளத்தில் உள்ள கணினி அறை, ஆசிரியர்கள் அறை, மேல் தளத்தில் உள்ள தலைமை ஆசிரியர் அறை பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்ததைத கண்டறிந்தனர். மேலும் பள்ளி யிலிருந்த 10-க்கும் மேற்பட்ட கணினிகள், லேப்டாப், படப் பெட்டி, அச்சு இயந்திரம் உள்ளிட்டவை மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை யினர் கணினிகளை திருடிச் சென்றவர்களை தேடி வரு கின்றனர்.