நடவடிக்கை எடுத்திட விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
சேலம், மார்ச் 10- விசைத்தறி தொழிலாளர்களை அச் சுறுத்தும் தனியார் வங்கி நிறுவனங் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழ்நாடு விசைத்தறி தொழிலா ளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விசைத்தறி தொழி லாளர்கள் சம்மேளனத்தின் மாநிலக் குழு கூட்டம் சேலம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் சம்மேளன தலை வர் பி.முத்துசாமி தலைமையில் நடை பெற்றது. இதில், விசைத்தறி தொழி லைப் பாதுகாக்க அனைத்து மாவட்டங்களில் ஜவுளிச் சந்தை அமைக்க வேண்டும். இலவச மின்சா ரம் ஆயிரம் யூனிட்டுகள் வழங்க வேண் டும். 8 மணி நேர வேலைக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் சட்டங்கள் அனைத்தும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். வீடில்லா விசைத்தறி தொழிலாளர்களுக்கு இல வச வீடுகள் கட்டித் தரவேண்டும். மேலும், சேலம் மாவட்டம் உள் ளிட்ட பல மாவட்டங்களில் விசைத்தறி கூடங்கள் அமைக்க கடன் வாங்கிய விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் தறியாளர்கள் ஜவுளித் தொழில் நெருக்கடி, மந்த நிலை காரணமாக கடனை திருப்பி செலுத்தாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக்கி தனியார் வங்கிகள் கடுமையான வட்டி சுமத்தி குண்டர்களை வைத்து மிரட்டியும், குடும்பங்களை அச்சுறுத்தி யும் வருகிறது. இதனால் தொழிலாளர் கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப் பட்டு தற்கொலைக்கு முயன்று வரு கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மத்திய மோடி அரசு தொழி லாளர் சட்டத் திருத்தங்கள் குறித்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் நாளன்று சிஐடியு மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் போராட் டம் நடத்துவது என முடிவெடுத்துள் ளது. அந்தப் போராட்டத்தில் விசைத் தறி தொழிலாளர்களும் திரளாக பங் கேற்பது. இதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனைத்து மத்திய தொழிற்சங்கங் கள் மற்றும் முற்போக்கு அமைப்பு கள் சார்பாக மார்ச் 23ஆம் தேதியன்று நாடு முழுவதும் போராட்டம் நடை பெற உள்ளது. அப்போராட்டத்தில் அனைத்து விசைத்தறி தொழிலாளர் கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் சம்மே ளனத்தின் மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார், மாநில பொருளாளர் எம். அசோகன் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.