உளுந்தூர்பேட்டை, ஜூன் 10- விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவும் நிலையில் அனைத்து கிரா மங்களிலும் குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்க்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் முழுவதும் இம் மாதம் 20 ஆம் தேதி 100 இடங்களில் பானை உடைப்பு போராட்டம் நடத்துவது என கட்சியின் மாவட்டக்குழு தீர்மா னித்துள்ளது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்களில் பல மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இரவு, பகல் பாராமல் பொது மக்களும், பெண்களும் குடிநீர் தேடி குடங்க ளுடன் அலைவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில்கூட வாகனத்தில்தான் குடிநீர் கொண்டு வந்து இறக்கும் சூழல் நிலவுகிறது. கடந்த ஆண்டே பருவமழை குறைவாக பெய்தது. இந்த ஆண்டு பருவமழை முற்றி லும் ஏமாற்றிய சூழலில் விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறி விக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாய சங்க மும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தற்போது சுமார் ரூ. 80 கோடி நிதி ஒதுக்கி அனைத்து கிராமங்க ளிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்ப தாக மாவட்ட ஆட்சியர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளார். உண்மை நிலை இவ்வாறு இருக்க இன்னும் பிடிவாதமாக விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்ட மாக அறிவிக்காமல் இருப்பது தமிழக அரசின் ஏமாற்று வேலையே. இந்நிலையில் கடும் குடிநீர் தட்டு;g பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் தேவையான அளவு ஆழ்துளை குழாய்கள் அமைத்தும், நகரங்களில் வாகனம் மூலம் குடிநீர் வழங்கி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என மாவட்டக்குழு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். வேல்மாறன் தலைமையில் உளுந்தூர் பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ்.வெங்கட்ராமன், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் டி. ஏழுமலை மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.