விருதுநகர், மே 20- ஊரடங்கால் 3 மாதங்களாக வேலை யின்றி தவித்து வரும் மைக் செட் உரிமை யாளர்கள் தங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் பெற ஏற்பாடு செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியதா வது: ஊரடங்கின் காரணமாக ஒலி, ஒளி அமைத்தல், பந்தல் போடுதல், மணமேடை மற்றும் அலங்காரம் செய்தல் போன்ற தொழில் கள் நடைபெறவில்லை. இதனால், விருது நகர் மாவட்டத்தில் இத்தொழிலை நம்பி வாழும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ளோம். தற்போது உணவுக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். எங்கள் தொழிலை மீண்டும் தொடர மானியத்துடன் கடன் வழங்கிட வேண்டும். மேலும் சில தளர்வுகள் தந்து குளிரூட்டப்படாத மண்டபங்களில் திரு மணம், காது குத்து, வளைகாப்பு உள் ளிட்ட சுபகாரியங்கள் நடத்திட அனுமதி அளிக்க வேண்டும் என அம்மனுவில் தெரி வித்துள்ளனர்.