இராஜபாளையம், பிப்.27- இராஜபாளையம் அருகே உள்ளது சுந்தரராஜபுரம். இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது கோட்ட மலை. இங்கு திடீரென காட்டுத் தீ பரவிவருகிறது. செவ்வாயன்று மாலை பரவியதீயை வனத்துறையினர் அணைத்தனர் , இப்பகுதி ராஜ நாகங்கள் வசித்து வரும் பகுதியாக அறிவித்திருப்பதாகக்கூப்படுகிறது. காட்டுத் தீ தொடர்ந்துபரவி வருவதால் அவை முற்றிலும் அழி யும் அபாயத்தில் உள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.