tamilnadu

குடிநீர் தட்டுபாடு: பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

விழுப்புரம், ஜூலை 26- திருவெண்ணெய் நல்லுார் பேரூராட்சியில் கடந்த 10 நாட்களாக குடி நீர் விநியோகம் இல்லாத தால் பொதுமக்கள் அவதி யடைந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் போரூராட்சி பகுதியில் 25,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அந்த பகுதி மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய, 4 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் டேங்க் அமைத்து காலை மாலை என குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது நிலத்தடி நீர்மட்டமும், நீர் ஆதாரமும் குறைந்து காலையில் மட்டும் தண்ணீர் விநி யோகிக்கப்பட்டது. தற்போது கடந்த 10  நாட்களுக்கும் மேலாக  முற்றிலுமாக தண்ணீர் விநி யோகம் செய்யப்பட வில்லை. அந்த பகுதி குடிநீர் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வா கம் தலையிட்டு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.