tamilnadu

img

ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி மாணவர்கள் மனிதசங்கிலி

விழுப்புரம் நவ, 1-  ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு விழிப்பு ணர்வு வாரத்தையொட்டி  விழுப்புரம் அரசு  சட்டக்கல்லூரியில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், பேரணி, உறுதியேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. நவம்பர் 1 வெள்ளியன்று கல்லூரி வளா கத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அரசு  சட்டக் கல்லூரி முதல்வர் என்.கயல்விழி  அனைவரையும் வரவேற்று உரையாற்றி னார். விழுப்புரம் மற்றும் கடலூர் மண்டல லஞ்  சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வா ளர் டி.சண்முகம் சிறப்புரையாற்றினார். பின்னர் சட்டக் கல்லூரி வளாகத்தில் இருந்து சட்டக்கல்லூரி மாணவ, மாணவி கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி புறப் பட்டு விழுப்புரம் நகராட்சி அலுவலகம் வந்த டைந்தது. லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு  உறுதி மொழி எடுக்கப்பட்டது. விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசு ரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு  லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விழிப்பு ணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகை யில் மாபெரும் மனித சங்கிலி நடைபெற்றது.