tamilnadu

img

42 லட்சம் வீடுகளுக்கு ‘ஸ்மார்ட் மீட்டர்’: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 19- சென்னையில் 42 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் மீட்டர் (மிகு மின் அளவிகள்) வழங்க 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி சில அறிப்புகளை வெளியிட்டார். பெருகி வரும் மின் சுமையை ஈடு செய்ய, மதுரை மாவட்டம் அழகர் கோவில் 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும். கோவை இருகூர், மதுரை திருப்பாலை துணை மின் நிலையங்கள் 230 கிலோ வோல்ட் நிலையங்களாகவும் தரம் உயர்த்தப்படும். சிவகங்கை மாவட்டம் அரசனூரில் புதிதாக 230 கிலோ வோல்ட் துணை மின் நிலை யம் நிறுவப்படும். நுகர்வோருக்கு தடையில்லாமல் மின்சாரம் தொடர்ந்து வழங்க ரூ. 998 கோடியில் 22 இடங்க ளில 110 கிலோ வோல்ட் துணை நிலையங்கள் பல்வேறு மாவட்டங்க ளில் அமைக்கப்படும்.

தொழில் நுட்ப மற்றும் வணிக இழப்புகளை குறைப்பதற்கு வினைத் திறன் மிகுமின் அளவிகள் பொருத்தும் திட்டம் சென்னை மாநகரத்தில் 42 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு ரூ. 4 ஆயிரத்து 300 செலவில் முதலில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் மாநி லத்தில் உள்ள பிற மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும். சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், இராமநாதபுரம், குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் பாதைகளில் சுமார் 200 கிலோ மீட்டர் நீளப் பாதை ரூ. 300 கோடியில் புதைவடங்களாக மாற்றப் படும்.

ரூ.2,500 கோடியில் தலித் மக்களுக்கு அடிப்படை வசதி

ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்புத் திட்டம், மத்திய, மாநில நிதிக் குழுவின் நிதி மற்றும் அம்மா ஆதி திராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதி ஆகியவற்றில் இருந்து 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மகளிருக்கு ரூ.14 ஆயிரம் கோடி வங்கிக் கடன்

2019-20ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன், இணைப்பு என இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 2020-21ஆம் ஆண்டு ரூ. 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.

துப்புரவு ‘தூய்மை’  பணியாக மாற்றம்

15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,525 கிராம ஊராட்சிகளில் 64 ஆயிரத்து 583 துப்புரவுப் பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இது தவிர, பல்வேறு துறைகளிலும் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணியை செய்து வருகிறார்கள். இந்த பணியா ளர்களின் செயல்பாடுகளை கவுர விக்கும் வகையில் துப்புரவுப் பணியா ளர்கள் இனி “தூய்மைப் பணியா ளர்கள்” என அழைப்படுவார்கள்.

தரம் உயரும் போடி நகராட்சி

தேனி மாவட்டத்திலுள்ள போடி நாயக்கனூர் நகராட்சி 100 ஆண்டு களைக் கடந்த நகராட்சியாகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தி லுள்ள இந்த நகராட்சி ஏலக்காய் வணிகத்துக்கு பெயர் பெற்றது. அந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பேருந்து நிலையத்திற்கு ஒரு ஓடுதளமும், வாரச் சந்தை உள்பட பல  உட்கட்டமைப்புகளும் அமைக்கப் படும். மேலும், பூங்காக்கள் மேம்படுத் தப்படும். இத்திட்டங்களுக்காக சிறப்பு நிதி ரூ. 50 கோடி வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் தெரி வித்தார்.