tamilnadu

img

கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட்

வேலூர்,அக்டோபர்.23- வேலூர் மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. வீட்டு வேலைகள் செய்வதற்காக வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கதியாக உள்ள சிவக்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். 
அதன்பின்பு டிஐஜி வீட்டில் வெள்ளி பொருட்கள் மர்றும் பணம்  திருடுபோனதாகக் கூறி தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். 
இதுகுறித்து சிவகுமாரது தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர தயாள் உத்தரவிட்டுள்ளார்.