வேலூர், மே 23-வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தமுஎகச சார்பில் குழந்தைகளை கொண்டாட, 7 முதல் 13 வயது வரை உள்ள கதை சொல்லிகள் பங்கேற்ற ‘கதை சொல்லப் போறோம் வாங்க’ என்ற இனிய நிகழ்ச்சி நடந்தது. ராணிப்பேட்டை காரை கோபால் ராஜ் இல்லத்தில் நடந்த நிகழச்சிக்கு கிளைத் தலைவர் க.கோபால்ராஜ் தலைமை தாங்கினார். தா.வெங்கடேசன், கோ.ரங்கநாயகி, ஆர்.மணிகண்டன், எம்.கிருஷ்ண வேணி,ஆர்.புவனேஸ்வரி ஆகியோர், முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் த.ரஜினி துவக்கவுரை நிகழ்த்த, கதை களத்தை வே.பூஜாஸ்ரீ துவக்கி வைத்தார்.தொடர்ந்து நிந்திக்க வைக்கும் இனிய கதைகளை சொன்னார்கள். வட்டார செயலாளர். செ.சரவணன் பரிசு வழங்கி, பாராட்டி பேசினார். தமுஎகச மாவட்டச் செயலாளர் எஸ்.சுரேந்திரன், ஜீவா, டாக்டர்.கபிலன் ஆகியோர் குழந்தைகளை வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் கிராம பெண்கள் ஏராளமானவர்கள் கதைகளை கேட்டு மகிழ்ந்தனர்.முடிவில் சு.ஹேமமாலினி நன்றி கூறினார்.