சென்னை, அக்.5- வைகை அணையிலிருந்து பெரியாறு மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வா யின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்க ளுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாறு வைகைப் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 9 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்ப டுத்தி, நீர் மேலாண்மையைக் கடைப் பிடித்து உயர் மகசூல் பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக் கையில் அறிவுறுத்தியுள்ளார். நீர் திறப்பால் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயி ரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.