tamilnadu

img

குடியாத்தம் நகர மக்களின் கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம்

வேலூர்,செப்.29- குடியாத்தம் நகரில் மக்களின் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், புவனேஸ்வரிப்பேட்டை  எம்ஜிஆர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ஆறு முகம், ஆர்.மகாதேவன், ஜி.யுவ ராஜ் ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, நகரச் செயலாளர் பி.காத்தவராயன், சு. சம்பத்குமார், என். பாபு உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீர்படுத்தி கொசு மருந்து அடிக்க வேண்டும் 7 வது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட கழிவறையை உடனே திறக்க வேண்டும்,  குடும்ப அட்டை இல்லாத குடும்பங்க ளுக்கு உடனே குடும்பம் அட்டை வழங்க வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. நகரில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாய் மற்றும் நகரில் நிலவும் சுகாதார சீர்கேடுகள் குறித்து நகராட்சி ஆணை யரிடம், மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, நகரச் செயலாளர்  பி.காத்தவராயன் , என்.பாபு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.