tamilnadu

img

தீண்டாமை சுவரை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

வேலூர், ஜூன் 4-வேலூர் மாவட்டம் வாலாஜா அம்பேத்கர் நகர் தலித் மக்கள் வாழ்விடத்திற்குள் அமைந்துள்ள  படவேட்டம்மன் ஆலயத்தில், காலங்காலமாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தடுத்து எழுப்பியுள்ள  14 அடி உயர தீண்டாமை சுவரையும், சர்வே எண் 2038/2 சர்கார் நத்தம் பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள  இரும்பு கதவையும் அகற்ற வலியுறுத்தி வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் தா.வெங்கடேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத் தில் அம்பேத்கர் நகர் நாட்டாமை ஏ.டி.மணி, ஜி.நாகராஜ், எஸ்.சத்தியமூர்த்தி, எஸ்.சாந்தம்மாள், எஸ்.காளீஸ்வரன், விஜய்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, விதொச மாவட்டத் தலைவர் வி.அருள் சீனிவாசன்,  செயலாளர் பி.ரகுபதி, மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பி.திலீபன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கோவலன்,  முன்னணி மாநிலக் குழு உறுபினர் ப.செல்வன், வழக்குரைஞர் பா.ரஜினிகாந்த், மாவட்டத் தலைவர் சி.ஞானசேகரன், மாவட்ட துணைத் தலைவர் வி.குபேந்திரன், துணைச் செயலாளர் ஏகலைவன், துணைத் தலைவர் ஏபிஎம்  சீனிவாசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், நெமிலி வெங்கடேசன், எஸ்.செல்வம்,எஸ்.பார்த்தீபன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சந்திரன் சி.துரைராஜ்,  நிலவு குப்புசாமி, ஜி.அல்லாபகஷ், என்.ரமேஷ், எம்.ஜோதி,விசிக மாவட்டச் செயலாளர் குண்டாசார்லஸ், சோ.தமிழ், ஒருங்கிணைந்த குடியரசு கட்சி புத்த பெருமாள், பிரகாஷ் ஆகியோர் உரையாற்றினர்.